நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை :-
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்டத்தில் நியாய விலை கடைகளின் செயல்பாடுகளை குறித்து அதன் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைகளும் அறிவுரைகளும் கூட்டத்தில் நடைபெற்றது.
மேலும் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் சிவகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.