வலங்கைமான் பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகளை திருவாரூர் மாவட்டகலெக்டர் நேரில் ஆய்வு.
வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை திருவாரூர்
மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில்
15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி பகுதியில்
பல்வேறு திட்ட பணிகள்நடைபெற்று வருகிறது
இந்நிலையில் திருவாரூர் மாவட்டகலெக்டர் சாரு ஸ்ரீ நேற்று
வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்டபுங்கஞ்சேரி வடக்கு தெருமற்றும் தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 35
லட்சத்தில் தமிழ்நாடுநகர்ப்புற சாலை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று
வரும்தார் சாலை பணிகள்,வலங்கைமான் பேரூராட்சி லாயம் வார்டுக்கு உட்பட்ட கோல்டன் சிட்டி பகுதியில் அம்ரூட் 2.0-திட்டத்தின் கீழ் ரூ. 35லட்சம் மதிப்பீட்டில்நடைபெற்று வரும் பூங்கா மேம்பாடு செய்தல் ஆகியவற்றைபார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
400 மாணவர்கள் அமரும்வகையில் நமக்கு நாமே
திட்டத்தின் கீழ் ரூ. 15லட்சத்தில் வாங்கப்பட்ட
ஸ்டீல் இருக்கைகள் ஆகியவற்றை பார்வை
இட்டார்.
தொடர்ந்து அனைவருக்கும் வீடு ஆகிய திட்டப்பணிகள்ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை கூறினார். நிகழ்ச்சியில்பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி,பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவநேசன், திமுக நகரச்செயலாளர் பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பேரூராட்சிபிரதிநிதிகள் உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டனர்.