எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழி அருகே குமிலங்காடு ஆதி நாகாத்தம்மன் கோவிலில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது. காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சீர்காழி அருகே குமிலங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருடம் பால்குடம் திருவிழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. பால்குட திருவிழாவை முன்னிட்டு புத்தூர் மெயின் ரோட்டில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தலையில் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக நாகத்தம்மன் கோயிலுக்கு வந்தனர்.
அப்பொழுது சிலர் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பால்குடம் நாகாத்தம்மன் கோவிலை வந்தடைந்ததை அடுத்து நாகாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு திபாரதனை காட்டப்பட்டது. இந்த பால்குடம் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்