தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூரில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த கோரி மடியேந்தி போராட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமுல்படுத்த கோரி மடியேந்தி போராட்டம் இன்று மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..