தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது ..
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு இன்று திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இதில் கருத்து கேட்டுப்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 5 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை எஸ்பி கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும்புதிதாக 36 புகார் மனுக்களை பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார் மேலும் வாரந்தோறும் புதன்கிழமை நாட்களில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என எஸ்பி தகவல் தெரிவித்தார்.
இந்தகூட்டத்தில் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..