திருவள்ளூர்

திருநிலை ஊராட்சியில் மணலி புதுநகர் காவல் நிலையம் சார்பில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனா ளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் உணவு உதவி பொருட்கள் வழங்க ப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. திருநிலை ஊராட்சி. இந்த ஊராட் சியில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மணலி புதுநகர் காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு மற்றும் உணவு உதவி பொருட்கள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற கட்டிட வளாகம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தனசேகரன் முன்னிலை வைத்தார் இதில் சிறப்பு அழைப் பாளராக மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், திருநிலை கிராம நிர்வாக அதி காரி ஜெயபாபிரதா, ஆகியோர் கலந்து கொண்டு மூத்த குடிமக்க ளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு உணவு உதவி பொருட்களை வழங்கினர்.

இதில் சுமார் 75 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆஷா பிரதாபன், ரேவதி ஜான்சன், பிரகதி வின்னரசு, பூபதி, கவிதா வெங்கடேசன், மற்றும் ஊராட்சி செயலாளர் காமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *