பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் ஆரம்பப் பள்ளிஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் .
மேலும் தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும்,
எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் SCERT இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும்,
தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும் எனவும்,
எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது எனவும்,காலை உணவுத் திட்டத்தை 6.7.8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும்
காலை உணவுத்திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் வட்டார தலைவர் ஈஸ்வரி, வட்டார செயலாளர் ரவிக்குமார், வட்டார பொருளாளர் எஸ்தர் மரியாள் மற்றும் வட்டார பொருப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
இதில் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.