நாமக்கல்
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் (NTLOA) சங்ககத்திற்கு வருகிற செப்டம்பர் 10ந் தேதி 2023-2026 வரையிலான 3 ஆண்டுகளுக்கு பணியாற்றும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அருள் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று (ஆகஸ்ட் -30)ஊர்வலமாக வருகை தந்து தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கொங்கு அருள், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மயில் ஆனந்த் (எ) ஆனந்தன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சீரங்கன், உதவி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாதேஸ்வரா பாலு (எ) பாலச்சந்திரன்,உதவி செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மணிராஜா சேகர் (எ) சந்திரசேகர் உள்ளிட்ட 60 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நேற்று சுப்புரத்தினம் தலைமையிலான அணியினர் அதேபோன்று வேட்பமான தாக்கல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அருள் மற்றும் சுப்புரத்தினம் அணியினர் இடையிலே தான் போட்டி நடைபெறுகிறது