பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வைரத்தோடு,தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை பாபநாசம் போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார்..

திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது.

இதில் அவர் வீட்டில் வைத்திருந்த வைரத்தோடு மூக்குத்தி தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, பாபநாசம் காவல் ஆய்வாளர் கலைவாணி, உதவி ஆய்வாளர் குமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தஞ்சாவூரிலிருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார் சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *