வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக டயர்கள் அகற்றும் பணிகள் சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மற்றும் வீடுகள், பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாக கூடிய டயர்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிங்காரவேலு பார்வையிட்டார். சுகாதாரத்துறையின் சார்பில் ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் கோபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகிருஷ்ணன், பாலாஜி மற்றும் வலங்கைமான் களப்பணியாளர் விஜயகாந்த் மற்றும் வலங்கைமான் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்குமார் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு சுகாதாரத் துறையின் சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *