கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்;-
தென்காசி மாவட்டம்
கடையத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிவுறுத்தலின்
பேரில் திமுக கடையம் தெற்கு ஒன்றியம் சார்பில்
தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமையில்
கடையம்சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் நீட் விலக்குநம் இலக்கு கையெமுத்து இயக்கம் நடைப் பெற்றது.
வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் முன்னிலை வகித்தார் இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் பக்கீர், மைதீன் ,
புகாரி முன்னாள் பஞ்தலைவர் மீராசாகிப், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவிகோதர் மைதீன், நிர்வாகிகள் சசிக்குமார், சுரேஷ், இசையேந்திரன், வின்சென்ட் பால், அந்தோணிசாமி, முல்லையம்பன்,அருள் அரோக்கியராஜ், அர்க்சுணன், பிரவின் குமார், சதீஸ்குமார், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தாவீது மோசே, துரைராஜ் பாண்டியன், டேவிட், கானா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.