ஆலங்குளத்தில் மெகா இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம்:-
யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பங்கேற்பு
தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் திருநெல்வேலி ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச எலும்பு ஸ்கேன் பரிசோ தனை முகாம் நடைப்பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
முகாமுக்கு . வந்தவர்களுக்கு ரூபாய் 2000 மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது.
அதனையெடுத்து மருத்துவ முகாமில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விலையில்லா முதலுதவி பெட்டிகளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.
முகாமில் ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் வெங்கடேஷ் பாபு மருத்துவர் சுமதி மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு எலும்பு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ஒன்றிய கவுன்சிலர் வாடியூர் அந்தோணிச்சாமி மற்றும் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் யூனியன் சேர் மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் செய்திருந்தனர்.