திருவாரூர் அருகே மன்னார்குடி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாஞ்சியூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
மன்னார்குடி வாஞ்சியூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறிக்க முயன்ற
மன்னார்குடி,13- கர்ணாவூர், தரிசவெளி பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் பாரதி (வயது-27) மற்றும்
மன்னார்குடி வாஞ்சியூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபிமன்யூ என்பவரின் மகன் ஆகாஷ் (வயது-24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, இடையூறு விளைவிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்கள்.