அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை – திண்டிவனம் சார்பாக ஸ்ரீ ராமர் அட்சதை கலசம் பெறும் விழா :-
திண்டிவனம் நகரம் ஆஞ்சநேயர் கோவிலில் 33 வார்டுகளுக்கும் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை – திண்டிவனம் சார்பாக ஸ்ரீ ராமர் அட்சதை கலசம் பெறும் விழா அனைத்து இந்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் திண்டிவனம் நகரத்தில் உள்ள அனைத்து ராம பக்தர்களும், பொதுமக்களும் , தாய்மார்களும் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமர் கோயிலுக்கான வரலாறு மற்றும் அதன் பெருமைகளை விளக்கி கூறப்பட்டது. அவ்வாறு கூறுகையில்….
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வெகு சிறப்பாக பூஜைகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜை ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுவதையும் குறிப்பிட்டு பேசிய போது நாமும் நம் திண்டிவன நகரத்தில் ஜனவரி மாதம் 22-ம் தேதி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்து வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து கலசங்கள் பெற்றுக் கொள்ளும் வார்டு குழு பொறுப்பாளர்களுக்கு பரிவட்டம் கட்டி , பாத பூஜை செய்து வழி அனுப்பி வைத்தனர்