தென்காசி மாவட்டம்
சுரண்டையில் அருள்மிகு ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருக்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருவிளக்கு பூஜை
கமிட்டி சார்பில் 34 வது மாபெரும் 3008 திருவிளக்கு பூஜை வழிபாட்டுவிழா நடைப்பெற்றது.
இவ் விழாவிற்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் திருவிளக்கு பூஜை கமிட்டி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச, சத்திய ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார்.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. இதில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருக்கோவில் பொறுப்பாளர்கள்., ஏழு சமுதாய நாட்டாண்மைகள் மற்றும் பொறுப்பாளர்கள்,
ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருவிளக்கு பூஜை கமிட்டி பொறுப்பாளர் & உறுப்பினர்கள், ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருவிளக்கு பூஜை கமிட்டி (மகளிர்) பொறுப்பாளர் & உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.