புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்றஉறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் 15 நபர்களுக்கு அரசின் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
இதில், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் ராமதாஸ், கோபி, ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, ஆதி திராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், மற்றும் கந்தசாமி, அங்காளன், மிலிட்டரி முருகன், தங்கராசு,ஜெனா, ராஜேந்திரன், மணக்குள விநாயகர் சுரேஷ், கந்தன், பரதன், செல்வநாயகம், பிரவீன், முத்து, கோதண்டம், அருள்மணி, அன்பு நிதி, சிலம்பு, அனீஸ் பாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.