மகாசிவராத்திரியை முன்னிட்டு புதுவை சித்தானந்த சாமி கோயில் வளாகத்தில் தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் புதுச்சேரி மற்றும் சென்னை மேலும் தமிழக பல மாவட்டங்களில் இருந்து மாணவிகள் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தலைசிறந்த நடன பயிற்றுநர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக நடந்து வந்த நிகழ்ச்சியில் நேற்று பரிசளிப்பு விழா நடந்தது. பிரனக்வி என்ற மாணவி தனி நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்து சிறப்பு பெற்றது. ஏம்பலம் அருகே நல்லாத்தூர் உட்பட கிராம பகுதியில் உள்ள கலைஞர்களும் பாராட்டைப் பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *