சோழவந்தான் வட்டபிள்ளையார் கோவில் அருகில் மன்னாடிமங்கலம் டாக்டர்.அப்துல்கலாம் அறிவியல்
மன்றம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது
அறிவியியல் மன்ற தலைவர் சரவணன் .தலைமையில் நடந்த இவ்விழாவில் கட்டுமானம் தொழிலாளர் டிரைசைக்கில் ஓட்டுவோர். மூடை சுமைப்போர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு புங்கை பூவரசு நீர் மருது வேம்பு என பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கலாம் அறிவியியல் மன்ற நிர்வாகிகள் அழகர் பிரதீப்குமார் விக்கி பிரவீண்குமார். அஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.