சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் சன்னதி வீதீயில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகின்றது.ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த வங்கியில் சேமிப்பு அக்கௌண்ட் கணக்கு வைத்து நகை கடன் வீட்டு கடன் மற்றும் சேமிப்பு பணம் பரிவர்த்தனை நடந்து வந்தது.

மேலும் வங்கி உள்ள கணிணிகளுக்கு இம்ப்ராக்சன் என்ற கணிணி சாப்ட்வேர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நகை அடமானம் மற்றும் வங்கி கணக்கில் பணம் பரிவர்த்தனையை வங்கி வாடிக்கையாளர்கள் செய்து வந்தநிலையில் கடந்த 30.ந்தேதி முதல் தமிழக முழவது உள்ள இம்320.நகர கூட்டுறவு வங்கி கணிணிகளில் இயக்கமாகசெயல் பட்ட இம்ப்ராக்சன் சாப்ட்வேர் கம்பெனி ஒப்ந்தகாலம் முடிந்ததாக கூறி ஆந்திராவை சேந்த வி சாப்ட்வேர் என்ற கம்பெனிக்கு கணிணி சாப்ட்வேர் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளதால் சோழவந்தான் உள்ளிட்ட தமிழகம் முழவது செயல் பட்டு வந்த நகர கூட்டுறவு வங்கி கணக்குகள் ஸ்தம்பித்து முடக்கம் அடைந்து உள்ளது

இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர் வங்கியில் பணம் எடுக்க முடியாமலும் நகை கடனுக்கு வட்டி கட்டமுடியாமலும் நகை அடமானத்தை திருப்ப முடியாமலும் திண்டாடி வருகின்றனர்.மேலும் வங்கியில் கணிணி செயல் பட நாள் கணக்கில் காலதாமதமாகி வரும் நிவையில் நகர கூட்டுறவு வங்கி கணிணி சாப்ட்வேர் மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் நகை மற்றும் வீட்டு கடன்களுக்கு தேவையில்லாமல்
வீண் அபதார வட்டி வாடிக்கையாளர்கள் தலையில் ஏற்றி வைத்து கட்ட வேண்டிய அவலசூழல் உள்ளதால் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள ஏழை நடுத்தர மற்றும் விவசாயிகள் திண்டாடி கவலையில் மூழ்கி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *