வாலாஜாபாத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் முன்னிட்டு ஓபிஎஸ் அதிமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அளித்து பிரம்மாண்ட கொண்டாட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே பந்தல் அமைத்து 500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் சுடச்சுட சிக்கன் பிரியாணி விருந்தளித்து பிரம்மாண்டமாக அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஸ் அணி கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளார்.