திருநெல்வேலி மாவட்ட கயிறு இழுத்தல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு 13.4.24 இன்று மாலை 6.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட கயிறு இழுத்தல் சங்க பொதுக்குழு கூட்டம் பேட்டை 999 உள் விளையாட்டு அரங்கில் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக 999 உள்விளையாட்டு உரிமையாளர்.திரு.நாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்..அக்கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

விவரம் முனைவர்.வெ.பெரியதுரை தலைவராகவும், திரு.ஆறுமுகநயினார் செயலாளராகவும், திரு.இசக்கி பொருளாளராகவும், திரு.முத்துசாமி மற்றும் திரு.விவேகானந்தன் துணைத்தலைவராகவும்,திரு.உத்தமராஜா மற்றும் திருமதி.ஆவுடையம்மாள் இணைச்செயலாளராகவும்,திரு.நாரயணன் மற்றும் செல்வக்குமார் செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கலந்து கொண்ட அனைவரையும் செயலாளர்.திரு.ஆறுமுகநயினார் வரவேற்று பேசினார். . கீழ்கண்ட தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது.: 1.புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 2.மாவட்ட சேம்பியன்சிப் போட்டிகள் ஜீன் கடைசிவாரம் அல்லது ஜீலை முதல் வாரம் நடத்த தீர்மனிக்கப்பட்டது.

3.மாநில சேம்பியன்சிப் போட்டிக்கு திருநெல்வேலி மாவட்ட அணியை தேர்வு செய்து கலந்து கொள்ள செய்வது என தீர்மனிக்கப்பட்டது. 4.மாவட்ட முழுவதும் இந்த விளையாட்டை வளர்பது, 5. தேர்வு செய்த வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, உள்பட பல தீர்மனம் நிறைவேறியது.நிறைவாக சங்க பொருளாளர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *