பொன்னேரியணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீத்தொண்டு வாரம்.

தமிழக முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படிதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட சின்னக்காவனம் பகுதியில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் உள்ளது இந்த தீயனைப்பு நிலையம் சார் பில் மாவட்ட அலுவலர் பாலசுப்ர மணியன் உத்திரவின் பேரில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் த.சம்பத் தலைமையில் கடந்த ஏப்ரல் 14 முதல் வரும் 20 ஆம் தேதி தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நாட்டின் கட்டமை ப்பை பேணிக்காப்பதற்கும் தீ தடு ப்பு நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யவும், தீ விபத்து ஏற்ப ட்டால் மக்கள் விழிப்புணர்வுடன் எப்படி இருக்க வேண்டும், உள்ளி ட்ட பல்வேறு விழிப்புணர்வு அடங் கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

மேலும் தீ விபத்து ஏற்பட்டு அதனை அனை ப்பது தீ விபத்தால் ஏற்பட்ட காயங் களை சரி செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக பொன்னேரி தீயணை ப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்புத் துறையில் உயிர் தியாகம் செய்த பணியாளருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. இந்த விழிப்புணர்வானது பொன்னேரி பேருந்து நிலையம் தாய்மான் செட்டி தெரு ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது இதில் பொன்னேரி தீ நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *