தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர்குளோபல் பூபதி திறந்து வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி பல்லடம் சாலையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட பழ வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட தலைவர் குளோபல் டாக்டர் பூபதி திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்
வணிகர்கள் பொதுமக்கள் என அனைத்து மக்களும் நீர் மோர் அருந்தினார்கள் உடன் மாவட்ட துணை தலைவர் சிவசங்கர் மாவட்ட துணை செயலாளர்கள் கணேசன் ராஜபாண்டியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனு தினேஷ் சிவரத்தினம் பழ வியாபாரிகள் சங்க தலைவர் அருண் செயலாளர் சிவசுப்பிரமணியன் பொருளாளர் சேக் அகமது காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேஸ் செயலாளர் கணேசன் பொருளாளர் ஜெம்ஷாபாய் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.