உதயசூரியனுக்கு வாக்களிக்க கோரி டவுன் ஹால் லுத்தரன் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர்
முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் வாக்குசேகரிப்பு
இந்திய கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள லுத்தரன் ஆலயத்தில்
,முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் திமுகவினர் சந்தித்து ஆதரவு கோரினர்.
தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்களுக்கு வழங்கி உதயசூரியனுக்கு வாக்களித்து திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது சமாதான மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஜோயல் ஆனந்த், மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் கிளமன்ட்,மாவட்ட மகளீர் அணி செயலாளர் மேரி.மற்றும்,செல்வநாயகம் ,.ராபர்ட் பாண்டியன்,ஜான்சன்,அவதார்சிங், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.