தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் – 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை தனிநபர் அடைத்ததால் ஆத்திரம் வீடுகளில் கருப்பு கொடியேந்தி போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வலையல்காரன் கொட்டாய் கிராமத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 200 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்திலிருந்து வெங்கடாபுரம் செல்ல கடந்த 40 ஆண்டுகளாக பொது வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பாதையின் நடுவே தனி நபர் ஒருவர் பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி பாதையை அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் கடந்த மாதம் தேர்தலை புறக்கனிப்பதாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேச்சு வார்த்தை நடத்திய பர்கூர் வட்டாட்சியர் திருமுருகன் தேர்தல் முடிந்த பிறகு பீஸ் கமிட்டி வைத்து சுமூக தீர்வு ஏற்படுத்திக்கொள்ளலாம் என பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து பொது மக்கள் அமைத்து காத்தனர். இந்நிலையில் தேர்தல் நாளான இன்று வலையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூறி பேச்சுவார்த்தை நடத்தி, கிராமத்தில் உள்ள சுமார் 200 வாக்காளர்களும் தேர்தலை புறக்கனிப்பதாக கூறி வாக்குசாவடிக்கு செல்லாமல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இனிமேலும் அரசாங்கம் இந்த வழி பாதையை எடுத்து தரும் வரை இனி வரும் தேர்தல்களையும் புறக்கணிப்போம் என கூறுகின்றன இதன் காரணமாக வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 77 எண் கொண்ட பூத்தில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. பர்கூர் வட்டாட்சியர் திருமுருகன் தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *