திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 29 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மு. ரமணன் முன்னிலை வகித்தார்.

உதவிப் பேராசிரியர் சுஜாதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் செந்தில் வேல்முருகன் பங்கேற்று, மாணவிகளாகிய நீங்கள் உடலாலும், மனதாலும் வலிமை மிக்கவர்களாக திகழ வேண்டும். செல்போன் மற்றும் பல்வேறு இணையதளங்களில் எதிர்மறை விளைவுகளில் சிக்காமல் நல்ல சிந்தனை மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் வளாத் தேர்வில் தேர்வான 400 மாணவிகளுக்கு பணிக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. முடிவில் இயற்பியல் துறைத் தலைவர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *