போடிநாயக்கனூரில் புதிய உணவகத்தை டிஎஸ்பி திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தாஜ் பாரடைஸ் ஓட்டலை போடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பி பெரியசாமி போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். இந்த விழாவில் தாஜ் பாரடைஸ் உரிமையாளர் வி முருகதாஸ் மற்றும் அவர் துணைவியார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான சங்கர் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தாஜ் பாரடைஸ் உரிமையாளர் வி முருகதாஸ் கனிவுடன் உபசரித்தார்