கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு, மாவட்ட நீதிபதி அப்துல் காதர் விடுப்பில் சென்றுள்ளதால் வழக்கினை விசாரணை செய்த பொறுப்பு நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த செயன் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் யாரும் ஆஜராகவில்லை.

இதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஆஜராகினர்.

குற்றவாளிகள் 10 பேரும் ஆஜராகாததால் எதிர்வரும் 29ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சார்பில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறப்பட்டது.

மேலும் அரசு தரப்பு சம்பவம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் விவரம் குறித்த மனுவும், குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிலுவையில் இருப்பதாலும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் வேறு பணியில் இருப்பதாலும் இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கூடுதல் நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *