சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை அடுத்து காட்டுப் பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்த வனத்துறையினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னலகுடி பகுதியில் கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை நடமாட்டத்தை பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்

தகவலின் பெயரில் வந்த வனத்துறையினர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் காளிகாவல்புரம் கூப்பிடுவான் உப்பனாறு தெற்கு பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை பலகையை பொதுமக்களின் பார்வையில் படாமல் காட்டுப் பகுதியில் வைத்துள்ளதாகவும்,முதலையை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *