நிலக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதல் ஜோடி தஞ்சம்.

திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்த அருண்பாண்டிக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி, நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *