ஆறு ஊர் சமுதாய மக்கள் சார்பாக சுடுகாட்டிற்கு பாதை வேண்டி மனு கொடுக்கப்பட்டது…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சம்சியாபுரம் கிராமம் சிவகாமிபுரம் குக்கிராமத்தில் வசிக்கும் ஆறு சமுதாய மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த சுடு காட்டிற்கு உண்டான பாதை, நான்கு வழி சாலையால் பாதை தடை செய்யப்பட்டது. நாங்கள் பயன்படுத்திய இந்தப் பாதை எங்களுக்கு வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தி. இராமசாமி அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. எங்களுக்கு பாதை ஒதுக்கி தர மறுப்பு தெரிவிக்கும் அரசிடம் இருந்து எங்களுக்கு பாதை ஒதுக்கி தர அனுமதி பெற்று தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.