திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த பைக். கடும் போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி கச்சேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் விஷ்ணுவர்தன் வயது 23 இவர் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செல்லும் பொழுது திடீரென பைக் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த விஷ்ணுவர்தன் பைக்கை கீழே விட்டு விட்டு மயிரிழையில் உயிர் தப்பினார்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் பற்றி எரிந்து பைக்கை தண்ணீர் பீச்சி அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *