தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
மாடப்பள்ளியில் அருள்மிகு அங்கநாதீஸ்வார் திருக்கோயில் தேர்த்திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி பகுதியில் மிகவும் பழைமையான அருள்மிகு அங்கநாதீஸ்வார் திருக்கோயில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் திருவிழாவின் கடைசி நாளான திங்கட்கிழமை இன்று காலை 10 மணி அளவில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் விஜயா அருணாசலம், திருப்பத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் டாக்டர் திருப்பதி,ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.