சோழவந்தான்
சோழவந்தானில் வைகை ஆற்றின் தென் பகுதியில் தென்கரை கிராமத்தில் அமைதது அருளபாலிதது வரும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி-மூலநாத சுவாமி திருக்கோவிலில், சித்திரை மாத உற்சவ திருவிழா நடைபெற்றது,
இவவிழாவை முனனிட்டு கடந்த 21-தேதி திருகல்யாண வைபவமும் நடைபெற்றது.
இதைதொடர்ந்து நேற்று காலை 10.30.மணியளவில் கிழக்கு ரத வீதீயில் உள்ள தேரடி கருப்புசாமி கோவிலில் சிறப்பு அபீஷேகம் நடந்தேறிபின்பு சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு அலங்கரித்த திருதேர் சப்பரத்தில் சுந்தரேஸ்வர் பிரியாவிடையுடனும் மற்றொறு அலங்கரித்த திருதேர் சப்பரத்தில் மீனாட்சி அம்மனும். விநாயகர் முருகன் அஷ்வதேவர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் என எழந்தருளியநிலையில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் காட்டி திருத்தேரை பெண்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக இழுத்து சென்றனர்
வழி நெடுகிழும் பக்தர்கள் வாசலில் கோலமிட்டு வரைவேற்று தேய்காய் பழம் வைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.அப்போது சிவ பக்தர்கள் சிவபாரயணம்,திருவாசகம் பாடி வழிபட்டனர்,
நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற. தேரோட்ட திருவிழா சுற்று புற கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்,
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி முன்னிலையில், சிவாச்சாரியார்கள் கண்ணன், செந்தில் உபயதாரர்கள் ரமேஷ் பாலமுருகன் குடும்பத்தினர் மற்றும் பிரதேஷ விழா கமிட்டினர் செய்திருந்தனர் .
காடுபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராசு சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் பபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு. இருந்தனர்