வந்தவாசி.உலக பூமி தினத்தையொட்டி வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் புவியை நேசி…! உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஆசிரியை சந்தியா வரவேற்றார். ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, சமூக ஆர்வலர் தரணி பங்கேற்று, புவி வெப்பமடைதல் காரணமாக பல்வேறு பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக சாலை விரிவாக்கம் காரணமாக பல்வேறு மரங்கள் நம் கண் முன்னே அழிக்கப்படுகின்றன.

எனவே சுற்றுச்சூழல் பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு தூய தேசம் காப்போம் என்று வலியுறுத்தினார். பங்கேற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஊடகவியலாளர் அ. ஷாகுல் அமீது நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *