பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் தனியார் பிரபல பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஷோரூமான “சத்யா” நிறுவனம் இயங்கி வருகிறது.

இச் ஷோரூம் முதலில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இயங்கி வந்தது. தற்போது இச்ஷோரும் விரிவுபடுத்தப்பட்டு வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) சுமார் 9:30 மணியளவில் கடையின் முன்புறத்தில் உள்ள மீட்டர் பாக்ஸிலிருந்து நெருப்பு பற்றி எரிந்துள்ளது சில நொடிகளில் தீயானது மேல்நோக்கி மலமலெவென பரவியுள்ளது.

ஷோரூமின் பெயர்பலகை ஸ்கீரினால் பொறுத்தப்பட்டிருந்ததால் திரையின் வலது புறம் முற்றிலும் எரிந்து சேதமானது.
தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

கடையை மூடும் நேரம் என்பதால் உயிர்சேதமோ பொருட் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீஸார் தீயணைப்பு நடந்த இடத்திலிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டதுடன் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *