திருவாரூர் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு 500 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா கோடிமங்கலம் கிராமத்தில் மங்களாம்பிகை உடனாகிய கோடீஸ்வரர் சாமி திருக்கோவிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது .
இதில் 500 இளநீரைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.