தூத்துக்குடியில் மது போதையில் பெற்ற தாயை மூன்று இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை
வடக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானதீபன் மனைவி குலோடில்டா (66). இவர்களது மகனான ஜெயன் (40 ) . இவர்களுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் நேற்று மது போதையில் நேற்று தாய் குலோட்டில்டாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே ஆத்திரத்தில் மகன் ஜெயன் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதி ஆகிய மூன்று இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்த ஜெயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பெற்ற தாயை மது போதையில் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.