பாபநாசம் அருகே மும்முனை மின்சார கம்பத்தை முறித்து கொண்டு கடையின் உள்ளே புகுந்த டேங்கர் லாரி..

ஓட்டுநர் உள்பட லாரியில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குறிச்சி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (41) என்பவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. டேங்கர் லாரியை கும்பகோணம் அருகே பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த விவேக் (34) என்பவர் ஒட்டி வந்தார்.

சாலியமங்கலம் பாபநாசம் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக வளத்தாமங்கலம் பகுதியில் இரும்பு கடை வைத்திருக்கும் வரதராஜன் கடையின், மும்முனை மின்சார கம்பத்தின் போஸ்டரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுனரும் லாரியின் உள்ளே பயணம் செய்த இருவரும் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மின்சாரவாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *