மலைவாழ் பழங்குடியினப் பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக இரத்த தானம் வழங்கிய மருந்தாளுநர் தேனி
தேனி மாவட்டம் தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் மகப்பேறு சிசைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு இரத்தம் தேவைப்பட்டது. ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் தன்னார்வலர்களுடன் இரத்தம் வழங்கினார்.இதில் மருந்தாளுநர் ரஞ்சித்குமார் 44 வது முறையாக குருதிக்கொடை வழங்கினார்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை குருதியைக் கொடையாக வழங்கும் மருந்தாளுநர் ரஞ்சித்குமாரை அனைவரும் பாராட்டினர்.