கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுத்து – சீதா தம்பதியினர். நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
மாந்தோப்பில் காவல் பணி செய்து வரும் இவர்கள், குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சீதா கீழ்செங்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா முருகதாஸ் என்பவர் வீட்டில் தங்கிக்கொண்டு, வேடி என்பவரது மாந்தோப்பில் காவல் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் சீதா காவல் காத்துவரும் மாந்தோப்பிற்கு பக்கத்து மாந்தோப்பிற்கு சொந்தகாரரான பிரகாஷ் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பிரகாஷக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்ற நோக்கத்தில் தருமபுரியில் உள்ள அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை பெற்று வந்ததாக கூறி பிரகாஷின் மனைவி ராஜேஷ்வரியிடம் பொய் வார்தை கூறியதையடுத்து, அதை உண்மை என நம்பிய பிரகாஷின் மனைவி அப்பெண் குழந்தையை தற்போது வரை பராமரித்து வருகிறார்.
இச்சம்பவத்தை முழுமையாக அறிந்த சின்னமுத்து, கடந்த 22ம் தேதி இரவு 11 மணிளவில் மனைவியை சமாதானப்படுத்த கீழ்செங்கம்பட்டி கிராமத்தில் உள்ள காவல் பணி பார்த்து வரும் மாந்தோப்பிற்கு தனது தம்பிகளான அரசு (22) மற்றும் ராம்குமார் (20) ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சென்ற சின்னமுத்து, மனைவி சீதாவிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
வீட்டிற்கு செல்லலாம் என அழைத்தபோதும் சீதா வர மறுத்த காரணத்தால், ஏற்கனவே திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிற்று பகுதியில் குத்தியுள்ளார். வலி தாங்காமல் அங்கும் இங்கும் ஓடிய சீதாவை அரசு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் கை, கால்களை பலமாக இறுக்க பிடித்துக்கொண்டதில், மீண்டும் வயிற்று பகுதியில் பலமாக குத்தியுள்ளார்.
அப்போதும் உயிர் போகாத நிலையில், மூச்சை நிறுத்த மூக்கை அறுத்துள்ளார். அப்போதும் உயிர் போகாத நிலையில், தலையை திருப்பி உடைத்து கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சீதா உயிரிழந்தார்.
சீதா தாக்கப்படும் சம்பவத்தினை அறிந்த பிரகாஷ் அங்கு தனியாக வந்து காப்பாற்ற முயன்ற போது, மூவரும் சேர்ந்து கத்தியை வைத்து துரத்தியுள்ளனர். மாந்தோப்பில் ஓடி மறைந்த பிரகாஷ், நேராக வீட்டிற்கு வந்து, தனது பாதுகாப்பிற்காக தான் வாங்கி வைத்திருந்த நரிக்குரவர்கள் பயன்படுத்தும் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து கொலை செய்துக்கொண்டிருந்த மூவரையும் நோக்கி சுட்டுள்ளார். இதில் சின்னமுத்து மற்றும் ராம்குமார் மீது பால்ரஸ் பாய்ந்துள்ளது.
கொலை செய்துவிட்டு சின்னமுத்து, அரசு மற்றம் ராம்குமார் ஆகிய மூவரும் தலைமறைவான நிலையில், அடுத்த நாள் போலீசார் பிரேதத்தை கைபற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வந்த நிலையில், இன்று அரசு மற்றும் ராம்குமாரை கைது செய்தனர்.
போச்சம்பள்ளி போலீசாரின் விசாரனையின்போது தான், துப்பாக்கியால் சுடப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து பிரகாஷ்-ஐ போலீசார் கைது செய்து, மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை கைபற்றினர். பின்னர் மூவரையும் ஊத்தங்கரை நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த சீதாவின் கணவர் சின்னமுத்து ஊத்தங்கரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார். அவரது உடலில் 11 இடங்களில் துப்பாக்கியிலிருந்து வெளி வந்த பால்ரஸ் பாய்ந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை திட்டமிட்டு கொலை செய்த கணவர். மூக்கை அறுத்தால் மூச்சு நின்றுவிடும் என நம்பி மூக்கை அறுத்த கணவர். மனைவியின் கள்ளக்காதலன் கொலை நடந்த இடத்திற்கு வந்து நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம். கள்ள உறவில் பிறந்த குழந்தையை தத்தெடுத்து வந்ததாக கூறி, மனைவியிடம் ஒப்படைத்த கணவன் என அடுத்தடுத்த திருப்பங்களால், போச்சம்பள்ளி காவல் நிலையம் சூடேரியுள்ளது.