கோடைகாலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழகமெங்கும் அஇஅதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்கள் அமைத்திட வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதன்படி ஏப்ரல் – 25 ஆம் தேதியான இன்று காலை – 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் ,பெரம்பலூர் நகர அஇஅதிமுக சார்பாக ,பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு அஇஅதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார், நகர செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார்,மேலும் இந்நிகழச்சியின்போது அக்கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *