சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து சிவகங்கை அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் அரண்மனை வாசல் முன்பு நீர் மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி, இளநீர், சர்பத் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜா சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் சேவியர் தாஸ் ஒன்றியச் செயலாளர் கருணாகரன், ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *