தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட எல்லை பகுதியில் அமைந்திருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப்பில் நீர்வரத்து தினசரி வந்து கொண்டிருந்தது,

தற்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அலுவலர்கள் தண்ணிர் வீணாவதாக முழுவதுமாக அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் நாள்தோறும் குடிதண்ணீராக, துணிதுவைக்க, குழிக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறோம், அதனால் கொஞ்சமாக திறந்து விட்டு மீதியை மூடி விடவும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அலுவலர்கள் ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *