கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

கிருஷ்ணகிரி

அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தனித்துக்கொள்ள தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க வலியுறுத்தினார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் தலைமையில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார், பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் வெள்ளரிக்காய் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் எம் எல் ஏ, லண்டன் பேட்டை ஆட்டோஹரி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் சோக்கடி ராஜா, சைலேஷ் கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சன் நாகராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, ஆறாவது வார்டு வட்டச் செயலாளர் ஸ்ரீதர், நகர துணை செயலாளர் குரு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், மற்றும் கிருஷ்ணகிரி நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்,.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *