திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை…
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.இதனை தடுக்கும் விதமாக திருமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார்.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கசாவடி மற்றும் கூத்தையார் குண்டு,சிவரக்கோட்டை,குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் பேரிக்கார்ட் தடுப்பு அமைத்து அதில் அதிநவீன சோலார் லைட் பொருத்தி விபத்துகளை தடுக்கவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்.இன்று திருமங்கலம் ரோந்து வாகன போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மணித்துளிகள் பொறுமை “உங்களது உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் காக்கும்”.