விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழா நடைபெற்றது,
இதற்காக காலை முதலே கோபூஜை, சண்டி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் முன்னூர் கிராம குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வந்து அங்காளம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்,
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ நவசக்தி டெம்பிள் டிரஸ்ட் நிறுவனர் நவீன் குமார் அடிகள் செய்திருந்தார் மேலும் இந்த விழாவில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். .
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செஞ்சி டிஎஸ்பி மற்றும் திண்டிவனம் டிஎஸ்பி, சிறப்பித்து வைத்தனர். பிரம்மதேசம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.