பெரம்பலூர் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றித்துட்பட்ட அகரம் சிகூர் ஊராட்சியில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செல்வமணி தலைமையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், கீழப்புலியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், அகரம் சிகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன், மற்றும் 300க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.