கிருஷ்ணகிரிமேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர் தலைமையில்,முன்னிலை ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிஅவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்,
பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்,
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ் , முன்னாள் நகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் நாராயணன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன் வட்ட கழக செயலாளர் ஹேமகுமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்ற சங்கர், தில்ஷித் ரகுமான், சிவராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சரஸ்வதி நட்ராஜ், சார்பணி மாவட்ட நிர்வாகி தவமணி, அமைப்புசாரா ஓட்டுநர் தனி மாவட்ட நிர்வாகி பாலுசாமி, வட்ட செயலாளர் ஹரி பிரசாத், ஓசூர் முன்னாள் நகர மன்ற தலைவர்கள் கந்தப்பன் நஞ்சுண்ட சாமி, மாவட்ட இணை செயலாளர் அலமேலு, பாசறை மாவட்ட நிர்வாகி சுரேஷ் ,கழக நிர்வாகி ஜார்ஜ் ரவி,மற்றும் ஓசூர் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் கழக தோழர்கள் என கலந்து கொண்டனர்,.