திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மஹாலில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA-2) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் சரவணன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு மேற்படி பணி குறித்து பயிற்சி மற்றும் தெளிவுரைகளை வழங்கினார். மேலும் வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உரிய விளக்கங்கள் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான (BLO-APP)-ஜ பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கினார்.
இந்தபயிற்சி வகுப்பில் ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.